6 செப்., 2012

என்ன ஆனது எனக்கு..?

எனக்கு என்ன ஆனது.? என்னுடைய கோபம் எனக்குள்ளேயே இருக்கிறதே...! நன் எப்படி இதனை அப்படியே ஏற்று கொண்டு இருக்கிறேனா இல்லை இறக்கிறேனா.?

ஏன் இந்த மவுனம்.? அவர்களை பார்த்து வந்த கோவம் எங்கே போனது.? ஏன் இப்படி தகிக்கும் மனதோடு வெறும் பிணம் ஆனேன்.? இவர்களை பார்த்து மற்றவர்களுக்கு வராத கோவம் ஏன்.? எதற்கு எனக்கு மட்டும் கோவம் வர வேண்டும்.?

எவ்வளவோ பேர் இருந்தும்  எனக்கு மட்டும் ஏன் இந்த கோவம்.? அதுவும் வெளியில் வராத கோவம்...அவமானமாகவே உள்ளது.

மானிடராய் பிறத்தலினால் அல்ல..
இவர்கள் இருக்கும் உலகில் நானும் இருப்பதால் அல்ல..
வேறு யாரும் இதை கேட்காததினாலோ அல்ல..
என் கோவத்தை ஒரு கேள்வியாக கூட கேட்கமுடியாமல் - எது
தடுத்ததோ அதன் மீது...

அநியாயத்தை கண்டு உன் மனம் கொதிக்குமானால் நீயும் என் தோழனே என்று சொன்ன " சே "விற்கு நான் தோழன் என்று சொல்லி வரும் மகிழ்ச்சியை விட அந்த அநியாயத்திற்கு எதிராக எதுவும் சொல்லாமல் செய்யாமல் இருப்பதனால் வரும் வேதனை அதிகமே...

நிகழ்வு
             1 . ஒரு கிழவன் ஒரு பொண்ணு கிட்ட பஸ் ஸ்டாண்டில்(CMBT - கோயம்பேட்) தப்பா நடந்துக்கிறான்.
             2 .ரயில் நிலையத்தில்(Bangalur) waiting hall -ல் இரு வாலிபர்கள் மொபைல் சார்ஜ் போடுகிறார்கள் மணிக்கணக்காக வேறு யாரையும் சார்ஜ் போட அனுமதிக்காமல்(இதில் அந்த மொபைல் வேற use பண்ணிடே)

மேல் குறிப்பிட்ட அந்த நபர்கள் தான் பிச்சைக்காரரிடம் சில காசுகளை பிச்சை போடுகிறார்கள்.
 ஏன்.? எதற்கு போடுகிறார்கள்.?