12 நவ., 2011

எங்கள் நட்பை தெரிந்துதிருக்க வாய்ப்பில்லை...

                       அதிகாலையோ அந்திமாலையோ அவனை  கடந்து தான் செல்வேன்.நான் செல்லும் போதெல்லாம் என்னையே உற்று நோக்குவான் நான் தான் அவனை அலட்சியப்படுத்தி செல்வேன்.ஒரு முறை கூடஅவனிடம் நின்று பேசியதில்லை இருந்தும் என்னை அவன் உற்று நோக்காமல் இருந்தது கிடையாது.நான் நடந்து செல்கையில் அவன் நிழல் மூலம் தொட்டுப் பேச முயற்சிப்பான் அப்பொழுதும் நான் அவனை தட்டிவிடுவது போல் வேகமாக விலகிப் போவேன் இருந்தும் என்னை தினமும் தொடாமல் விடுவத்தில்லை.
ஒரு நாள் அவனருகில் ஒருவன் இளநீர் விற்று கொண்டு இருந்தான் அதை பார்த்த போது பொறாமையும் கோவமும் வந்தது.அதனால் இரு நாட்கள் அவனை பார்க்கவே செல்லவில்லை.அவனோ நான் வருவேன் என எண்ணி காத்திருந்து வாடியே விட்டான்.என்னாலும் அதற்க்கு மேல் இருப்பு கொள்ளாமல் அவனை காண சென்றேன்.என்னை பூக்கள் இல்லாவிடினும் இலைகளை உதிர்த்தே வரவேற்பு தந்தான் அன்றுதான் நான் அவனருகில் சென்று என் தோழ் சாய்த்து பேச தொடங்கினேன்.இதுவரை நான் அவனிடத்தில் ஒரு முறையேனும் பேசாமல் இருந்ததில்லை.எங்கள் நட்பு இப்படி இறுகி உறுதியகிக் கொண்டு இருந்த போது யார் கண் பட்டது என தெரியவில்லை என்னிடமிருந்து பிரித்து மன்னிக்கவும் அவனை அழித்து என்னிடமிருந்து பிரித்துச் சென்றனர் நெடுஞ்சாலை துறையினர் காரணம் கேட்டால் ஏதோ சாலை விரிவாக்கப் படுகிறதாம் அதனால் தான் இவைகளை வெட்டி எறிந்தோம் என்றனர்.

                 நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்தது என்ன அவ்வளோ பெரிய குற்றமா? இல்லை என்னிடம் நட்பு கொண்டது தான் குற்றமா? இன்றும் தெரியவில்லை அவன் செய்த குற்றம் என்ன என்பது...?இன்னும் பல கேள்விகள் என்னை துளைத்தெழுகிறது.இவன் எனக்கு மட்டுமா தோழன்? இன்னும் என்னைப்போல் எத்தனை தோழர்கள் இவனுக்கு இருந்து இருப்பார்கள்? அவர்கள் இவனை காண வந்தால் எவளோ காயமுற்றுப் போவார்கள்..?


பார்த்து கொண்டோம் 
பேசி கொள்ளவில்லை - ஆனால்
நட்பாகிப்  போனோம்
நடந்து செல்கையில் 
அவன் நிழலில் நிற்கையில் 
நிம்மதி கொள்வேன் 
இப்போது நிம்மதி 
இழந்தேன் அவனில்லாமல் 
யாருக்கு தெரியும் 
எங்கள் இருவரின் 
நட்பைப் பற்றி..?
நான் சிந்தும் கண்ணீர்
துளிகளுக்கு கூட 
தெரிந்து இருக்க 
வாயிப்பில்லை....

பின் குறிப்பு:
                இப்போது வருத்த பட்டு கொண்டு தான் இருக்கிறேன் என்ன நட்பை இழந்ததால் மட்டும் இல்லை எங்களை போல் இன்னும் எத்தனை நட்பை இதே போன்ற காரணத்திற்காக அழிக்கப் போகிறார்கள் என்பதற்காக... என் நட்பின் இல்லை என் தோழனின் இறப்பை கனத்த இதயங்களுடன் பதிவு செய்கிறேன்.

இப்படிக்கு 
                   நிழலின் தோழன்.

10 நவ., 2011

பொய்யாளன்

பொய்க்கும் எனக்குமான இடைவெளி சிறியது ரொம்ப சிறியது.என்னோட வாழ்கையில்  அழகான நாட்கள் உருவாக்கியதுல இந்த பொய்க்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது.என்னோட இன்பம் துன்பம் சந்தோசம் துக்கம்னு எல்லா நேரத்துலேயும் இந்த பொய் என்னோட ஒரு நண்பன் போல என்னுடே இருக்கிறது.
                    சிலருக்கு படிக்கறது எழுதுறது பயணங்கள்னு பிடிக்கிறது போல எனக்கும்  பொய் பேசுறது பிடிக்கும்.அதுவும் எனக்கு பிடிச்சவங்க கிட்ட சொல்கிற பொய்கள் தான் அதிகம் அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு.வாழ்க்கையை சுவரசியப்படுத்துற விசயங்களில் பொய்யும் ஒன்ன இருக்குனு நம்புறவன் நான்.பொய் சொல்லுறதும் ஒரு கலை தான்.அந்த கலையை அழகா பண்ணினது என்னோட பள்ளிப் பருவத்தில் தான்.ஏன்னா அந்த பருவத்தில் தான் பொய்யை அழகா ஒரு நேர்த்தியோட சொல்லி இருக்கேன் .நான் சொல்லுறது பொய்யினு தெரியாத அளவுக்கு சொல்ல முடிஞ்சது.இப்போ இந்த இளமை பருவத்தில் அதன் மாதிரி நேர்த்தி ஏனோ வர மாட்டேன்கிறது.
                    என்னோட பள்ளி பருவத்தில் உண்மையை விட பொய் தான் அதிகமா பயன்படுத்தி இருப்பேன்.அந்த அளவு அதிகமா பயன்படுத்தியதற்கு பயம் கோவம் வெறுப்புனு நெறைய காரணங்கள் இருந்தாலும்  இப்போ யோசிச்சி பார்க்கும் போது அது ஒரு போதையை தந்து அதுக்கு அடிமையாக வச்சிருந்தது(இப்பவும்) போல உணர்கிறேன்.இப்போ என்னோட வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது போதெல்லாம் நான் சொன்ன பொய்களும் அதனால் ஏற்ப்பட்ட விளைவுகளும்  தான் நினைவுக்கு  வருகிறது.அது துக்கமோ இன்பமோ ஏதுவ இருந்தாலும் அதை ரசிக்க தான்  செய்கிறது மனது.நினைவுகள் சுமனதுங்கறதே இப்போ தான் புரிகிறது. மனசுக்கு பிடித்தவர்களிடம் சொன்ன பொய் தான் எனக்குள் எதோ ஒரு குற்ற உணர்வை தரும் அதனால் அவர்களிடம் உண்மையை சொல்லி விடுவேன்.அப்படி நான் சொன்ன உண்மைகள் தான் என்னை அதிகமாவே  காயப்படுத்திருக்கு இருந்தாலும் மனசுக்கு பிடித்தவர்களிடம் பொய் சொல்லுவது ஒரு ஆனந்தமே அவங்ககிட்ட திரும்ப திரும்ப பொய் சொல்ல வைக்கிறது.அதனால் தான் ஏனோ நான் என்னை ஒரு உண்மையானவன் என சொல்லி கொள்ள விரும்புவது இல்லை.என்னை ஒரு பொய்யாளன் என சொல்லி கொள்ளவே விரும்புகிறேன்.


பின் குறிப்பு:
இது என்னுடைய முதல் பதிவு.